66
உலகக்கோப்பை தோல்வியில் இருந்து இன்னும் மீளாத இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி வென்று கோப்பையை கைப்பற்றியது.
தொடர்ந்து 10 ஆட்டங்களில் தோற்காமல் அசுர பலத்துடன் திகழ்ந்த இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/11/IMG-20231123-WA0017-300x176.jpg)
இந்நிலையில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சிராஜ் தனது X தளத்தில்,
“நாங்கள் விரும்பியது போல் முடிவுகள் இருக்கவில்லை. ஆனால் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியதில் நான் பெருமையடைகிறேன். அதனையே நான் எப்போதும் விரும்புகிறேன்.
இந்த தோல்வி இதயத்தை நொறுக்கியது. ஏமாற்றத்தையும், வேதனையையும் வார்த்தைகளால் சொல்ல முடியாது.
இந்த தோல்வியை ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமாக உள்ளது” என கூறியுள்ளார்.
மேலும் அவர், “நம் நாட்டிற்கு பெருமை சேர்க்க ஒவ்வொரு நாளும் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்.
இந்நிலையில் எங்களை விளையாட்டிற்கு தயார்படுத்த அயராது உழைத்த எங்கள் ஊழியர்களுக்கு நன்றி.
இந்திய அணிக்கான உங்கள் பங்களிப்பு மகத்தானது. ரசிகர்கள் அனைவருக்கும் எங்களது நன்றி.
மைதானத்தில் நீல கடலை போன்ற ரசிகர்கள் கூட்டத்தை பார்ப்பது ஈடு செய்ய முடியாத உணர்வு.
நீங்கள் வழங்கிய ஆதரவு அற்புதமானது. ஜெய்ஹிந்த்” என நன்றி தெரிவித்துள்ளார்.