Home » பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களே பொறுப்பு – ரணில் தெரிவிப்பு

பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களே பொறுப்பு – ரணில் தெரிவிப்பு

by namthesamnews
1 comment
இலங்கை முகங்கொடுத்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களே பொறுப்பு.
இவ்வாறு இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய Firstpost க்கு பேட்டியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். .
மேலும் தெரிவிக்கையில்,
ராஜபக்சக்கள் இதனை ஒப்புக்கொண்டு தமது செயற்பாடுகளுக்காக மன்னிப்புக் கோர வேண்டுமா என்பது அவர்களது விருப்பு.
ராஜபக்சக்கள் காலத்தில் நாட்டில் நெருக்கடி ஏற்பட்டது. மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியையும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியையும் இராஜினாமா செய்தபோது, நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் அமைப்பும் சரிந்தது.
நாட்டை பொறுப்பேற்று நடத்த  வேண்டிய எதிர்க்கட்சிகள் பொறுப்பில் இருந்து நழுவிச் சென்றுவிட்டன.
 நான் ஒருபோதும் ராஜபக்சக்களை பாதுகாக்கவில்லை. ராஜபக்சக்கள் விலகிய போது நாட்டை பொறுப்பேற்க எவரும் யாரும் இல்லை. அதனாலேயே நான் பொறுப்பேற்றேன். இப்போது விமர்சனம் செய்பவர்கள் பொறுப்பில் இருந்து ஓடியவர்களே.
விமர்சகர்கள் கூறுவது போல்  ராஜபக்சக்களுக்கு நான் பினாமி அல்ல. தற்போது ராஜபக்சக்கள் கட்சி பிளவுபட்டுள்ளமை உண்மையே – என்றார்.

You may also like

1 comment

இலங்கையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அரசு... - Namthesam Tamil News November 29, 2023 - 2:36 pm

[…] செயற்பாடுகளினால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களை வழங்க […]

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00