Home » இலங்கையில் அதிகரித்து வரும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை..

இலங்கையில் அதிகரித்து வரும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை..

by namthesamnews
0 comment

இலங்கையில் அதிகளவான உயிரிழப்புகள் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த, 2010 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட புள்ளிவிபரத்தின் படி 130,337 உயிரிழப்புக்கள் பதிவாகியிருந்தது.

இதனைத்தொடர்ந்து 2022 ஆம் ஆண்டில் 179,792 ஆக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எம்.பி. அனுரகுமார தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் 633,303 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் மாத்திரம் 852,652 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நாட்டின் உத்தியோகபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அடுத்த ஆண்டில் முன்னெடுக்கப்படும் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தி பி.எம்.பி. அனுரகுமார தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00