இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட Ind Sri Ferry Services Pvt Ltd இன் நிர்வாக முகாமையாளர் கூறுகையில், காலநிலையை பொறுத்து காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினம் இடையே பயணிகள் கப்பல் சேவை டிசம்பர் நடுப்பகுதியில் தொடங்கப்படும்.
இந்த கப்பல் சேவையை இயக்குவதற்கு இரு நாட்டு அரசுகளிடமிருந்தும் முன் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், இதற்காக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பலை தனது நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டிசம்பர் நடுப்பகுதியில் இக் கப்பல் நாகப்பட்டினம் வந்தடையும் என்றார். இந்த கப்பலில் 150 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும், அத்தோடு 60 கிலோ பொதிகளோடு பயணிக்கமுடியும்.
ஒரு வழி கட்டணமாக இந்திய ரூபா 4,250 மற்றும் வரிகள் அறவிடப்படும் , 17,000 இலங்கை ரூபாய் மற்றும் வரிகள் அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது,
இலங்கையின் பிரதான விற்பனை முகவரான Metro Voyages அல்லது அதன் துணை உப முகவர்களுடாக வெளியிட இருக்கும், Android மற்றும் iOS செயலி ஊடாக பயண முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.