Home » வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்கள் – ஜனாதிபதி முன்மொழிவு

வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்கள் – ஜனாதிபதி முன்மொழிவு

by namthesamnews
1 comment
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முரண்பாடுகள் முடிவுக்கு வந்து இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத இடங்கள் உள்ளன. அவற்றில் மக்களை மீள குடியேற்ற இதற்காக 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதேபோல் யாழ்ப்பாணத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு- செலவு திட்ட உரையில் தெரிவித்தார். அதற்கான பணிகளுக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
வடக்கு கடற்றொழிலாளர்களின் கடற்றொழிலை அபிவிருத்தி செய்யவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடற்றொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க தனியார் துறையுடன் இணைந்ததாக திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
மேலும் 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் பல்கலைக்கழகங்கள் அமைக்கும் அதிகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும். இதன்மூலம் உயர்தரம் பயிலும் அனைவருக்கும் பல்கலைக்கழக கல்வியை பெற்றுக்கொள்ள முடியும்.
4 புதிய பல்கலைக்கழகங்களை நிறுவுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். உள்ளூர், வெளிநாட்டு மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர இது சிறந்த வழியாகவும் அமையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

You may also like

1 comment

இறக்குமதி பொருட்களுக்கு வரி அதிகரிப்பு!! - Namthesam Tamil News December 2, 2023 - 5:08 pm

[…] என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நடவடிக்கை […]

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00