Home » குழந்தைகளின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக மாறி வரும் பாடசாலை உபகரணங்கள்..

குழந்தைகளின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக மாறி வரும் பாடசாலை உபகரணங்கள்..

by namthesamnews
0 comment

அண்மை காலமாக தரமற்ற பாடசாலை உபகரணங்களைப் பயன்படுத்துவதால் குழந்தைகளின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சந்தையில் கிடைக்கும் தரமற்ற இறக்குமதி செய்யப்பட்ட பாடசாலை உபகரணங்களினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

சட்டவிரோதமாக பல்வேறு முறைகளின் ஊடாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தரமற்ற பாடசாலை உபகரணங்கள் இன்று சந்தையில் விற்கப்படுகின்றது.

இவ்வாறான உபகரணங்களை குழந்தைகள் பயன்படுத்துவதன் மூலம் ஈயம் போன்ற கன உலோகங்கள் வாய்வழியாக உட்கொள்வதன் மூலம் உடலில் சேர வாய்ப்பு உள்ளது.

ஆனால் சர்வதேச தரத்தின்படி, குழந்தைகள் பயன்படுத்தும் பென்சில்கள் மற்றும் வண்ண பென்சில்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் 19 கன உலோகங்களில் இருந்து பாதுகாப்பை வழங்கும் என EN71-3  சான்றிதழ் அச்சிடப்பட்டிருக்கும்.

இதற்கிடையில், குழந்தைகள் உணவின் மூலம் நேரடியாக உடலுடன் தொடர்பு கொள்ளும் தண்ணீர் போத்தல்கள் மற்றும் மதிய உணவுப் பெட்டிகள் போன்ற பிளாஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும்.

சந்தையில் இருந்து கொள்வனவு செய்யும் போது உபகரணங்களில் அடிப்பகுதியில் BPA யில் 5 என்ற எண் எழுதப்பட்டிருந்தால், அவை பயன்படுத்த ஏற்றது என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00