150
‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், ” ‘அஸ்வெசும’ மற்றும் ‘உறுமய’ திட்டங்களை மக்களிடம் முறையாக கொண்டு செல்ல அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்” என்று வலியுறுத்தினார்.
மேலும், ‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கு விரைவில் நிவாரணம் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் துரிதமாக நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.