பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி, நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு மாநில அரசு தடைபோடுவதாக திமுக அரசை நேரடியாக விமர்சித்தார். இதுபோல் பல்வேறு குற்றச்சாட்டுகளை திமுக அரசு மீது கூறினார்.
இந்நிலையில், இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின், “மத்திய அரசு கொண்டு வந்த எந்த திட்டங்களுக்கு நாம் தடையாக இருந்தோம்? எய்ம்ஸ் மருத்துவமனை கட்டட திறப்பதற்கு தடையாக இருந்தோமா? மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு தடையாக இருந்தோமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “திமுகவை அழிப்பேன் என்று கூறி பலர் அழிந்து போனதுதான் தமிழ்நாட்டின் வரலாறு. தோல்வி பயத்தில் பிரதமர் அவதூறு பரப்புகிறார். தான் வகித்து வரும் பதவியை தாழ்த்தும் வகையில் பிரதமர் பேசியுள்ளார். ஆளுங்கட்சியாக செயல்பட தெரியாத பாஜக, இனி எதிர்க்கட்சியாக விளங்க வாழ்த்துக்கள்’ என்றார்.