111
இலங்கை ஆசிரியர் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையேயான சந்திப்பொன்று யாழ்ப்பாணம் – வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசெப் ஸ்ராலின் உள்ளிட்ட குழுவினர் மற்றும் ஆளுநர் திருமதி PHM சாள்ஸ், கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிறஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது வடக்கு மாகாணத்தில் கல்விச் செயற்பாட்டில் நிலவும் ஆசிரியர் வெற்றிடம், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இடமாற்றம், பாடசாலைகளில் உள்ள வளப் பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன என ஜோசெப் ஸ்ராலின் தெரிவித்தார்.