78
நல்லிணக்கத்தின் கதவுகளை இறுகப்பூட்டி சீல் வைத்து விட்டு, இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்குகின்றேன் என்றால், இது கண்ணை மூடிக்கொண்டு பூனை பால் குடிப்பது போன்று உள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், “மேலும் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் எனின் நிரந்தர சமாதானத்துக்கான வழியை சிந்திப்பதுடன், இனப் பிரச்சினைக்கான சிறந்த தீர்வையும் முன்வைக்க வேண்டுமே தவிர வேறு எந்த செய்கைகளாலும் நாட்டை முன்னேற்ற முடியாது” எனவும் தெரிவித்தார்.