Home » 9 ஆண்டுக்கு பின் வைரலான லாரன்ஸ்! மனம் திறந்த லட்சுமி ராமகிருஷ்ணன்

9 ஆண்டுக்கு பின் வைரலான லாரன்ஸ்! மனம் திறந்த லட்சுமி ராமகிருஷ்ணன்

by namthesamnews
0 comment

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் சொல்வதெல்லாம் உண்மையில் “இது நடிப்பு மேடம்” என்ற டயலாக் பேசி பிரபலமான லாரன்ஸ் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் பேசியுள்ளது பேட்டியில் வெளியாகியுள்ளது .

இவர் சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் “மேடம் இது ஆக்சன் மேடம்… இது நடிப்பு மேடம்…” என்றெல்லாம் பேசிய வார்த்தைதான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இதை பார்த்த பலரும் இப்போது லாரன்ஸ் என்ன செய்கிறார்? எங்கு எப்படி இருக்கிறார்? என்றெல்லாம் அவரை தேடிக் கொண்டிருந்த நிலையில், பிரபல youtuber ஒருவர் லாரன்ஸை தேடி அவர் வேலை செய்த இடத்திற்கு சென்று இருக்கிறார்.

இந்த நிலையில் லாரன்ஸ் குறித்து சொல்வதெல்லாம் நிகழ்ச்சியை அப்போது தொகுத்து வழங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதில் “எத்தனை எத்தனையோ குற்றவாளிகளை உட்கார வைத்து சொல்வதெல்லாம் நிகழ்ச்சி மூலம் அவர்களிடம் பேசுகிறோம்.

படித்தவர்களை விட படிக்காதவர்களிடம் தான் நிறைய திறமை இருக்கும். சில பேர் நான்கு கொலைகள் செய்து விட்டு வந்து என் எதிரே உட்கார்ந்து எதார்த்தமாக பேசுவார்கள்.

அவர்களிடமும் ஹியூமர் சென்சும் இருக்கும். ஒருத்தவங்களை ஒரு கோணத்தில் மட்டுமே காண்பிக்காமல், அவர்களின் மற்றொரு குணத்தையும் வெளிப்படுத்துவோம்.

அதோட வெளிப்பாடு தான் லாரன்ஸ். அன்றைக்கு நிகழ்ச்சிக்கு லாரன்ஸ் வந்தது இப்போதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

அவருக்குள்ள அப்படி ஒரு காமெடி சென்ஸ் அதனால்தான் அவர் பேசியபோதும், ஆக்சன் பண்ணுன போதும் அமைதியாக இருந்தோம்.

அந்த திறமை மக்களுக்கு தெரியணும் தான் அப்படியே ஒளிபரப்பினோம்.

நாங்கள் நினைத்திருந்தால் எடிட் பண்ணி இருக்கலாம் இல்லையா? ஆனால் அப்படி செய்யவில்லை. அவர் தப்பு பண்ணிட்டு வந்திருந்தா கூட அவருடைய திறமையை ரசித்தோம்.

அதே நேரத்தில் அவருடைய தப்பை நியாயப்படுத்தவில்லை. அவருக்கு நாங்கள் சப்போர்ட்டும் பண்ணவில்லை.

லாரன்ஸுக்கு இருக்கிற திறமைக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருந்தால் அவரும் பெரிய காமெடியனாக வந்திருப்பார்.

அவரை திருந்தி குடும்பத்தை ஒன்று சேர்த்தது எங்களுக்கும் அப்போ ஒரு ஆறுதலாக இருந்தது. கண்ணனுக்கு லாரன்ஸாலோ இல்லனா லாரன்ஸ்க்கு கண்ண நாளோ உயிருக்கு ஆபத்தா முடிந்திருக்கும். நாங்க ரெண்டு பேரையும் அழைத்து எதிர்காலத்தில் நடக்க இருந்த ஆபத்தை தடுத்திருக்கிறோம்.

ஆனால், அதற்குப் பிறகு லாரன்ஸ் எங்கு இருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியாது. லாரன்ஸ் உடன் எங்களுக்கு தொடர்பு இல்லை. இப்ப அவர் எங்க எங்கே என்ன பண்ணுறார் என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00