Home » இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை!!

இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை!!

by namthesamnews
0 comment

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில்  இரண்டு படகுகளில் மீன் பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் நேற்று மதியம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காகேசந்துறை  துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்,

இந்திய  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலையீட்டைத் தொடர்ந்து நேற்றிரவு உடனடியாக இந்திய மீனவர்கள் படகுகளுடன்  விடுவிக்கப்பட்டனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட செய்தி ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 நாள் பயணமாக நேற்று ராமேஸ்வரம் வந்த போது, மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் அவரை நேரில் சந்தித்து, கைது செய்யப்பட்ட அவரது உறவினர்களை படகுகளுடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மீனவர்களின் கோரிக்கையை ஏற்ற இந்திய நிதியமைச்சர் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை தொடர்பு கொண்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, 22 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களை இலங்கை கடட்படையினரின் உதவியுடன்  இந்திய கடல் எல்லைவரை  அழைத்துச் சென்று . அங்கிருந்து இன்று காலை தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00