75
நாட்டில் (இலங்கையில்) கடந்த மூன்று நாட்களில் சரியாக 1,000 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, நாளொன்றுக்கு ஏறத்தாழ 300 நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவிக்கையில்,
நாட்டில், மீண்டும் ஒரு நாளைக்கு சராசரியாக 250 நோயாளர்கள் பதிவாகும் நிலை வந்துள்ளது.
தற்போது நிலவும் மழையுடனான காலநிலையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், டெங்கு பரவலைத் தடுக்கும் வகையில், மக்கள் தமது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை அவதானித்து அவற்றை அழிக்க வேண்டும்.
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் திகதி வரை மொத்தம் 77,487 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிக எண்ணிக்கையிலானவர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.
இதேவேளை , மேல் மாகாணத்தில் 36,266 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.