65
அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் தாயகத்தில் இருந்து கலந்து கொண்ட பெண்மணி சாதனை படைத்துள்ளார்.
முள்ளியவளை- முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி என்பவர் பிலிப்பைன்ஸில் இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றார். இவர் ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/11/FB_IMG_1700557848609-300x200.jpg)
இவர், 1500m ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம், 5000m விரைவு நடை ப் போட்டியில் தங்கப் பதக்கம்,
800m ஓட்டப் போட்டியில் வெங்கலப் பதக்கம் ஆகியவற்றை பெற்றதுடன், 5000m ஓட்டப் போட்டியில் நான்காம் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.