113
அரச துறையில் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வெல்லவாய பிரதேசத்தில் இடம்பெற்ற காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கும் நிகழ்வில் வைத்து அவர் இன்று(07) இதனை தெரிவித்துள்ளார்.
அதன் படி, இந்த வருடம் தேர்தல் காலம் நெருங்கி வருவதால் அதனை செய்ய முடியாது என அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அதிபர், அடுத்த வருட வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக சம்பளத்தை அதிகரிக்க முடியும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.