75
சீனாவில் பல நிறுவனங்கள் வர வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானிடம் சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் (Emmanuel Macron) உடன் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping) தொலைபேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த தொலைபேசி உரையாடலில் பல பிரெஞ்சு நிறுவனங்கள் தங்கள் நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என ஜி ஜின்பிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சீனாவுடன் பல ஒப்பந்தங்களில் பிரான்ஸ் கையெழுத்திடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் கேத்தரின் கொலோனாவின் (Catherine Colonna) சீனாவுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தின்போது இந்த ஒப்பந்தங்கள் குறித்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஓர் ஆண்டுக்கு முன்பு நான் 50 அதிக உமிழ்வு தொழில்துறை தளங்களுக்கு சுற்றுச்சூழல் மாற்ற ஒப்பந்தங்களை வழங்கினேன்.
அவை அனைத்தும் பிரதமருடன் இன்று கையெழுத்தானது என மேக்ரான் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் சுவாச நோய் அறிகுறிகள் கொண்ட குழந்தைகள் நிரம்பி வழிவதாக WHO கூறியுள்ளது.
கோவிட் – 19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் நாட்டில் சுவாச நோய்கள் அதிகரித்துள்ளதாக WHO தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/11/images-69-300x169.jpeg)