73
கடந்த ஒக்டோபர் மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் மூலம் 517.4 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ட்விட்டர் பதிவொன்றில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தாம் அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற, 2022 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இந்த வருடத்தின் ஒக்டோபர் மாத இறுதி வரை, வெளிநாட்டு பணவனுப்பல் மூலம் 7.6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.