பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்த நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் பார்ட்டி வைபில் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் பிக்பாஸ் இல்லத்திற்குள் பார்டி நடந்துள்ள போது பிக்பாஸ் போட்டியாளர்கள் ‘மாஸ் மரணம்’ பாடலுக்கு நடனமாடும் வீடியோ தற்போது அதிக வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், முதலில் மாயா, நிக்ஸன், பூர்ணிமா ஆகியோர் நடனமாட அவர்கள் அரச்சனாவையும் அழைத்து நடனமாடுகின்றனர். அர்ச்சனாவும் அவர்களுடன் ஆனந்தமாக குத்தாட்டம் போடுகிறார்.
ஆனால் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்ற போட்டியாளரில் ஒருவர் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும். அர்ச்சனாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
அரச்சனா போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக, ஓயாமல் ஆதரவு வழங்கிய பி.ஆர் வேலை பார்த்த பிரதீப் ரசிகர்கள், அர்ச்சனா ‘புல்லி கேங்’ உடன் குத்தாட்டம் வீடியாவை பார்த்து விட்டு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
டைட்டிலை வென்ற பிறகு தான் இருக்கும் இடத்தையே மறந்து விட்டாரே அர்ச்சனா என அவரை போட்டு சமூக வலை தளங்களில் தாக்கி வருகின்றனர்.
#nixen calling #archana to join #maya squad and she joined enjoying with them meanwhile my senior #pradeep is still whining and crying out in x and his dumb followers asking to boycott absolute clowns of all season #biggbosstamil7pic.twitter.com/6CTDMsxJ3P
— Pradeep Antony (@Theedhaadiboy) January 17, 2024