5 கோடி ரூபா கப்பம் கோரிய கொலை மிரட்டல் விடுத்த சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மிரிஹான பகுதியை சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மிரிஹான பொலிஸ் நிலையத்தில் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்
சந்தேகநபருக்கும் முறைப்பாட்டுதாரருக்கும் இடையில் காணி பிரச்சினை காரணமாக சந்தேகநபர் வெளி நாட்டில் உள்ள தனது உறவினர் ஒருவரின் மகன் ஊடாக இந்த கொலை மிரட்டல்களை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.