மில்லனிய – பெல்லந்துடாவ பகுதியில் யுவதி ஒருவர் தொடர்பில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ள நிலையில் விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மில்லனிய, பெல்லந்துடாவ, தம்மானந்த மாவத்தையில் கடை ஒன்றுக்கு முன்பாக வைத்து வாள்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ளார்.
ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.