தமிழ் சினிமாவில் எப்போது மறக்கமுடியாக நடிகராக இருப்பவர் நடிகர் கவுண்டமனி. அவரது நக்கல், டைமிங் காமெடி போன்றவை தற்போது இருக்கும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு செம விருந்தாக உள்ளது.
கவுண்டமனி தற்போது சினிமாவில் வந்தால் அவரை கொண்டாட லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.
இந்நிலையில், கவுண்டமனி குறித்து நடிகை சுகன்யா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில், “நான் அவருடன் நடித்த படங்களில் என்னை, வாம்மா, போம்மா என்று அழைப்பார். மிகவும் அன்புடன் நடந்து கொள்வார்.
சினிமாவைப் பற்றி அபார திறமை கொண்ட அவர், ஆங்கில படங்கள் நிறைய பார்ப்பார். அதில சில படங்களை எனக்கும் பரிந்துரைத்திருக்கிறார். அது என்னுடைய கேரியருக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.
சினிமாவில் நாம் பார்க்கும் கவுண்டமனி என்பதை தாண்டி அவர் நிஜ வாழ்க்கையில் அபாரமான அறிவும், திறமையும் கொண்ட மனிதர். சக கலைஞர்கலை மதிக்ககூடியர்” என்று புகழ்ந்து பேசினார்.