80
தமிழகத்தில் வயல்வெளியில் வேலைப்பார்த்து கொண்டிருந்த பெண்ணின் செல்போன் வெடித்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள வகுத்தாழ்வார்பட்டியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி.
இவர் சின்னகோனார்பட்டியில் மணிமேகலை, பெரியம்மாள் ஆகியோருடன் வயல்வெளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மின்னல் தாக்கியது. இதில் முத்துலட்சுமி இடுப்பில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது.
இதனால் தீப்பற்றியதில் முத்துலட்சுமி உட்பட மூன்று பெண்களும் இதனால் படுகாயம் அடைந்தனர்.