நாடாளுமன்ற உறுப்பினரான தம்மிக்க பெரேராவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நியமிக்குமாறு அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பசில் ராஜபக்சவின் வெற்றிட பதவிக்கு தம்மிக்க பெரேரா பொருத்தமானவர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய அரசியலமைப்பின்படி, அதன் அனைத்து நிர்வாக உறுப்பினர்களும் புதிதாக நியமிக்கப்பட வேண்டியுள்ளனர்.
இந்நிலையிலேயே தம்மிக் பெரேராவை தேசிய அமைப்பாளராக நியமிக்குமாறு இந்தக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில், வெற்றிடமாகவுள்ள தேசிய அமைப்பாளர் பதவிக்கு கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.