Home » சாதனைப் பெண் அகிலத்திருநாயகி யாழில் கௌரவிப்பு

சாதனைப் பெண் அகிலத்திருநாயகி யாழில் கௌரவிப்பு

by namthesamnews
0 comment
அண்மையில் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் முல்லைத்தீவு முள்ளியவளையைச் சேர்ந்த 72 வயதுடைய திருமதி. அகிலத்திருநாயகி பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார்.
குறித்த போட்டியில் 1500 மீட்டர் ஓட்டப்போட்டி மற்றும் 5000 மீட்டர் விரைவு நடைப்போட்டி ஆகியவற்றில் தங்கப் பதக்கங்கள் பெற்றிருந்தார்.
அத்துடன் 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
இலங்கைக்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த அகிலததிருநாயகிக்கு அண்மையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தால் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிலையில் இன்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனால் சாதனை நாயகி அகிலத்திருநாயகி யாழ். மாவட்டச் செயலகத்தின் முன்பாக மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
குறித்த கௌரவிப்பு நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00