141
யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில்
மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இளைஞனே குறித்த அலுவகத்தில் மின்சாரம் தாக்கிய நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் 26 வயதுடைய சாவகச்சேரி நுணாவில் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞன் அலுவகத்தில் பணியயற்றிய வேளை, அவருக்கு மின்சாரம் தாக்கியயுள்ளது.
தொடர்ந்து அங்கிருந்து உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.