Home » வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் – விசாரணை 1ம் திகதிக்கு!!

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் – விசாரணை 1ம் திகதிக்கு!!

by namthesamnews
1 comment
அண்மையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் முதலாம் திகதிக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றால் தவணையிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே இந்த உத்தரவு நீதவானால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என தெரிவிக்கப்படும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாகராஜா அலெக்ஸ் எனப்படும் இளைஞரின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைகள் நேற்றையதினம்  இரண்டாவது நாளாகவும் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

நேற்றைய விசாரணையில், 6 முதல் 11 வரையான சாட்சிகள் தமது சாட்சியங்களை முன்வைத்தனர்.

உயிரிழந்த  இளைஞனின் தந்தை, சிறைச்சாலையில் உயிரிழந்த இளைஞருடன் தடுத்து வைக்கப்படிருந்த மற்றைய சந்தேகநபர்  உள்ளிட்ட ஆறு பேர் நேற்றையதினம்  சாட்சியமளித்தனர் என உயிரிழந்த இளைஞர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார்.

வழக்கு விசாரணையைத் தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் முதலாம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வரும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You may also like

1 comment

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்!! - வடக்கு கிழக்குக்கு ஆபத்து??? - Namthesam Tamil News November 29, 2023 - 7:29 pm

[…] வங்காள விரிகுடாவில் உருவெடுத்துள்ள காற்றழுத்த தாழ்வு நிலை எதிர்வரும் சில நாட்களில் […]

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00