Home » போதையில் தாயை கொன்று வீட்டில் புதைத்த மகன்!

போதையில் தாயை கொன்று வீட்டில் புதைத்த மகன்!

by namthesamnews
0 comment
தமிழக மாவட்டம் கடலூரில் இளைஞர் ஒருவர் பெற்ற தாயை அடித்து கொன்று, வீட்டிலேயே புதைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தின் திட்டக்குடியில் உள்ள தொளார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.
இவரது மனைவி கஸ்தூரி (47).
இவர்களின் இளைய மகன் சேவாக் (21).
இவர் நேற்றைய தினம் கஞ்சா அடித்த போதையில் இருந்துள்ளார்.
அப்போது தாய் கஸ்தூரியை தாக்கி கொலை செய்துள்ளார். பின் சடலத்தை வீட்டினுள்ளே புதைத்து வைத்துவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
இந்நிலையில் கஸ்தூரியை காணாமல் உறவினர்கள் சேவாக்கிற்கு போன் செய்துள்ளனர்.
சேவாக் முன்னுக்கு பின் முரணாகவும், சரியான முறையில் பதில் பேசாமலும் போனை வைத்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பாயில் இரத்தக்கறை இருந்துள்ளதை கவனித்துள்ளனர்.
உடனே ஆவினங்குடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கஸ்தூரி கொலை செய்யப்பட்டு, சடலம் வீட்டின் உள்பகுதியில் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் சேவாக்கை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்ற தாயை மகனே போதையில் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00