Home » போர்நிறுத்தத்திற்கு முன்பாக பள்ளியின் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்!..

போர்நிறுத்தத்திற்கு முன்பாக பள்ளியின் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்!..

by namthesamnews
2 comments
வடக்கு காஸாவின் ஐநா சபையுடன் இணைந்த பள்ளி மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
போர்நிறுத்ததிற்கு முன்பாக இஸ்ரேல், வடக்கு காஸாவில் குடியிருப்பு பகுதிகள்,ஜபாலியா அகதிகள் முகாம் மற்றும் இந்தோனேசியா மருத்துவமனை ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளது.
தாக்குதல் நடந்த பள்ளியானது ஐநா நிவாரண மற்றும் வேலை முகமையால் நடத்தப்பட்டு வரும் பள்ளி ஆகும்.
மேலும் ஷேக்-ரத்வான் பகுதியில் உள்ள குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தியதில் 10 பேர் வரை கொல்லப்பட்டனர்‌ என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் ஹமாஸ் போர்நிறுத்தம் வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு தொடங்கும் என்று கத்தார் அறிவித்தது.
அதற்கு முன்னதாக, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant, இடைக்கால போர்நிறுத்தத்தை “சிறிய அவகாசம்” என்றும், அதன்பின் சண்டை தீவிரமாக தொடரும், பணயக்கைதிகளை மீட்டு கொண்டு வர மீண்டும் அழுத்தம் கொடுப்போம் என்றும் அவர் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
மேலும் “இன்னும் குறைந்தது இரண்டு மாதங்கள் சண்டை எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறினார்.

You may also like

2 comments

சீனாவில் மீண்டும் புதியதாக சுவாச தொற்றுநோய் பரவல்! இந்தியாவுக்கும் எச்சரிக்கை - Namthesam Tamil News November 30, 2023 - 8:19 am

[…] ஆண்டுகளில் சீனாவில் இருந்து பரவிய கொரோனா பெருந்தொற்றில் பாதிக்கப்பட்டு மீண்ட நிலையில், […]

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உழல் வழக்கில் விடுவிப்பு - Namthesam Tamil News November 30, 2023 - 1:33 pm

[…] பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீஃப் (73) […]

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00