Home » கட்டுநாயக்க விமான நிலையத்தில் Self Check-in மற்றும் Self-Bag-Drop Services அறிமுகம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் Self Check-in மற்றும் Self-Bag-Drop Services அறிமுகம்

by namthesamnews
0 comment
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் தங்கள் பயணிகளின் விமானப் பயண அனுமதிக்கான Self Check-in மற்றும் Self-Bag-Drop Services சமர்ப்பிப்பதற்கான சுயசேவை வசதிகளை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்மூலம் விமான நிலைய நடவடிக்கைகளை சௌகரியமாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்க சிறப்பாக வழிவகுக்கிறது.
நெரிசலான சந்தர்ப்பங்களில் காத்திருப்புநேரத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு அறிமுப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய சுய-சேவை  பயணிகள் செக்-இன் செயன்முறையின் மூலம் தடையின்றி செல்லவும், விரைவாக குடியகல்வு செயற்பாடுகளுக்குச் செல்லவும் அனுமதிக்கிறது.
பயணிகள் இப்போது விமான செக்-இன், இருக்கை தெரிவு மற்றும் போர்டிங் பாஸ்கள் மற்றும் பொதிகளுக்கான ரக்களை அச்சிடுதல் உள்ளிட்ட முழு செக்-இன் செயன்முறையையும் சுயமாகமேற்கொள்ளமுடியும். இதனைத் தொடர்ந்து, அவர்கள் தங்களுடைய பொதிகளை சிரமமின்றி செல்ப்-பேக்-டிராப் வசதியில் வைக்கலாம், இதன் மூலம் குடியகல்வு அனுமதிக்கு பின்னர் போர்டிங் பகுதிக்கு நேரடியாகச் செல்லலாம்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00