தனது குழந்தையை பார்த்துக் கொள்ள பிரபல திரைப்பட நடிகர் ராம்சரண் ரூ.5 லட்சம் வரை சம்பளம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரையுலகை பொறுத்தவரை பிரபலங்கள் பிசியாக இருப்பார்கள் என்பதால், தங்கள் குழந்தைகளை பராமரித்துக் கொள்ள பெண் ஒருவரை நியமித்துக் கொள்வார்.
அதன்படி நடிகர் ராம்சரண்- உபாசனா தம்பதிக்கு திருமணம் ஆகி, 11 ஆண்டுகள் கழித்து, கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கிளின் காரா என பெயர் வைத்துள்ளனர்.
திருமணம் ஆகி நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்துள்ளதால், ராம்சரண்- உபாசனா தங்கள் குழந்தையை பொக்கிஷம் போல் பார்த்து வருகின்றனர்.
இருப்பினும் அவ்வப்போது வேலைகளில் பிசியாகிவிடுவதால், தங்கள் குழந்தையை பார்த்துக்கொள்ள பெண் ஒருவரை நியமித்துள்ளனர்.
அவருக்கு ரூ.5 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதுதான் இணையத்தில் விவாதமாக உள்ளது. அந்த பெண் பல பிரபலங்களின் குழந்தைகளை பராமரித்து வந்துள்ளார். ஆனால், அந்த பெண் யார் என்ற விபரம் வெளியாகவில்லை.