சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதானஇ 14 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, அவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் நேற்று முன்தினம் கடற்படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதன்போது, குறித்த மீனவர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.