Home » தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு.

தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு.

by Tamilan Jeyachandhiran
0 comment

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 14ஆம் திகதி நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் அத்துமீறி தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினர் மூன்று படகுகளையும், அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது செய்தனர்.

அந்த மீனவர்கள் ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களை இன்று (27) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு மீளவும் இன்று நீதிவான் கஜநிதிபாலன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 12 தமிழக மீனவர்களின் விளக்கமறியலையும் நவம்பர் 8 ஆம் திகதி வரை நீடிக்க உத்தரவிட்டப்பட்டது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00