Home » கொழும்பில் பதற்றம்! பலர் கைது!! – பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் குவிப்பு.

கொழும்பில் பதற்றம்! பலர் கைது!! – பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் குவிப்பு.

by Tamilan Jeyachandhiran
0 comment
கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
கொழும்பு – விஹாரமகா தேவி பூங்காவிற்குள் நுழைந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்க்ள மற்றும் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த தலைவர்கள் உள்ளிட்டவர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, திடீரென பூங்காவிற்குள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் உள் நுழைந்ததால் அங்கிருந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பீட மாணவர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் போது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று மாலை குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பு – விஹாரமகாதேவி பூங்காவிற்கு முன்பாக ஒன்று திரண்ட மருத்துவ பீட மாணவர்கள் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது போராட்டம் தீவிரமடைந்த நிலையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மேலும், போராட்ட களத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00