92
மோட்டார் சைக்கிளுடன் புகையிரதம் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்று பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி – ஆனந்தபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி புகையிரதம், கிளிநொச்சி – ஆனந்தபுரம் பகுதியில் புகையிரத கடவையில் வீதியை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.