68
அண்மையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு, தமது தவறாலேயே ஏற்பட்டது என இலங்கை மின்சார சபை ஏற்றுக்கொண்டுள்ளது.
மின்வெட்டு சம்பவம் தொடர்பில், இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னிலையில், மின்வெட்டு தொடர்பான விடயங்களை முன்வைத்தபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த விடயம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஆணைக்குழு கூடவுள்ளது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் மஞ்சுல பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மீண்டும் மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர பல மணித்தியாலங்கள் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.