இலங்கையில் வீடொன்றில் நுழைந்த கொள்ளையர்களில் ஒருவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மினுவாங்கொடை – யாகொடமுல்ல பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையர்கள் சிலர் நுழைந்துள்ளனர்.
அதிகாலை வேளையில் அவர்கள் புகுந்தபோது, வீட்டில் இருப்பவர்கள் சுதாரித்துக் கொண்டு கொள்ளையர்களைத் தாக்கியுள்ளனர்.
இதனால் மூவரில் இருவர் தப்பியோடியுள்ளனர். ஆனால் ஒருவர் மட்டும் கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அந்நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த மினுவாங்கொடை பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகாலையில் வீட்டினுள் நுழைந்த கொள்ளையன் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.