ஜேர்மனியில் 4 பேரை ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோவர் சாக்ஸினி(Lower Saxony) மாகாணத்திண் வேஸ்டர்வெசடி (Westervesede) மற்றும் போதல் (Bothel) பகுதிகளில் அமைந்திருக்கும் இரண்டு வீடுகளில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்திருப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது.
இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், ராணுவ வீரர் ஒருவர் இது தொடர்பாக காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
ஆனால், அவர் எதற்காக இந்த கொலையை செய்தார் என்ற விவரத்தை இதுவரை கூறவில்லை. குடும்ப பிரச்சனை காரணமாக நடந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும், 4 பேரை ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதிகளில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.