115
நாட்டில் ஜூலை 08 மற்றும் 09 ஆகிய இரண்டு நாட்களில் கடமையாற்றிய அரச அதிகாரிகளுக்கு விசேட சம்பள உயர்வை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், எதிர்கால பதவி உயர்வுகளுக்காக அந்த அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (09) அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.