Home » மயங்கி விழுந்து உயிரிழந்த மகன்.. அதிர்ச்சியில் உயிரைவிட்ட தந்தை

மயங்கி விழுந்து உயிரிழந்த மகன்.. அதிர்ச்சியில் உயிரைவிட்ட தந்தை

by Vaishnavi S
0 comment

தமிழக மாவட்டம் ஈரோட்டில் மகன் உயிரிழந்த சிலமணி நேரங்களில் தந்தையும் இறந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.

கர்நாடகாவில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்தார் மாதேவன். 55 வயதான இவர் ஈரோடு மாவட்டம் தாளவாடி கனகராசர் வீதியைச் சேர்ந்தவர் ஆவார்.

இவருக்கு இரண்டு மகன்கள். அதில் மூத்தவர் மரச்சாமான் கடை நடத்தி வந்த கணேசன் (34). இவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில், கணேசன் வீட்டில் இருந்து தனது கடைக்கு கிளம்பியுள்ளார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை பரிசோதித்தபோது மாரடைப்பில் கணேசன் உயிரிழந்தது தெரிய வந்தது.

சில ஆண்டுகளாக கணேசன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், மயங்கி விழுந்து உயிரிழந்தது அவரது தந்தை மாதேவனுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இதனையடுத்து மாதேவனுக்கு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன. மகனை இழந்த துக்கத்தில் இருந்த கணேசனும் மாதேவனும் மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர் அவர் உடனடியாக தாளவாடியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன் பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக சாம்ராஜ் நகரில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள்,ஏற்கனவே மாதேவன் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனால் பின்னர் தந்தை – மகன் இருவரின் உடல்களையும் அருகருகே வைத்து அவர்களது உறவினர்கள் தகனம் செய்தனர்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00