இந்திய தலைநகர் டெல்லியில் கணவர் மாரடைப்பால் உயிரிழந்ததால், அடுத்த 24 மணிநேரத்தில் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த அபிஷேக் – அஞ்சலி, டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு சென்றுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 30ஆம் திகதி தான் இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் உயிரியல் பூங்காவில் திடீரென அபிஷேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடனே அஞ்சலி தனது நண்பர்களை அழைத்ததையடுத்து, அபிஷேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அபிஷேக் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் அபிஷேக்கின் உடல் அல்கான் குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
கணவரின் இறப்பால் மனமுடைந்த நிலையில் இருந்த அஞ்சலி குடியிருப்பின் 7வது மாடி பால்கனிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்துள்ளார்.
இதனையடுத்து அவர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கணவரின் இறப்பினால் அடுத்த 24 மணிநேரத்தில் இளம் மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் எற்படுத்தியது