Home » ஸ்மார்ட்போன் பயனர்கள் 5 ஆண்டுகள் தான் பயன்படுத்த வேண்டும்

ஸ்மார்ட்போன் பயனர்கள் 5 ஆண்டுகள் தான் பயன்படுத்த வேண்டும்

by Vaishnavi S
0 comment

இந்திய அரசாங்கம் ஸ்மார்ட்போன் தொடர்பில் புதிய விதியை அமுல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக, ஸ்மார்ட்போன் பயனர்கள் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டும் என புதிய விதியை, இந்திய அரசு கொண்டுவர உள்ளது.

இதற்கு காரணம், ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் 5 ஆண்டுகளுக்கு பின் அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தும் என்றும், இதனால் மனிதர்களின் மூளை, இதயம் மற்றும் உறக்கம் போன்றவை பாதிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

புதிய விதியின்படி, நீங்கள் Iphone உட்பட எந்த Brand-யின் ஸ்மார்போனை வாங்கினாலும், அதை கட்டாயமாக 5 ஆண்டுகளுக்கு பின் மாற்ற வேண்டும் என பரிந்துரைக்கிறது.

நீங்கள் பயன்படுத்திய ஸ்மார்ட்போன் சாதனத்தை கட்டாயமாக Exchange செய்தோ அல்லது Recycling-கிற்கு வழங்கியோ, அதற்கு ஏற்ப தொகையை பெற்றுக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. அத்துடன் புதிய ஸ்மார்ட்போனை வாங்கிக்கொள்ளலாம்.

இந்திய அரசு கட்டாயமாக ஸ்மார்ட்போனை மாற்றும் இந்த புதிய விதியை கொண்டு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

சமீப காலமாக வெளிவரும் ஸ்மார்ட்போன்களின் தரம், 5 ஆண்டுகள் மட்டுமே நீடிப்பது போல் உருவாக்கப்படுவதாக பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00