Home » சாலையை கடக்க முயன்ற தாய்-மகன் போதை இளைஞர்களால் மரணம்

சாலையை கடக்க முயன்ற தாய்-மகன் போதை இளைஞர்களால் மரணம்

by namthesamnews
0 comment

ரீல்ஸ் எடுக்க போதையில் காரை ஓட்டிய இளைஞர்கள்! தாய், மகன் பலியான கொடூரம்

ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர்கள் மதுபோதையில் காரை ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்சால்மரில் இருந்து பார்மர்நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அதில் பவானி சிங், ரோஷன் கான் ஆகிய இருவர் போதையில் பயணித்துள்ளனர்.

தேவிகோட் மாவட்டம் அருகே கார் தாறுமாறாக வேகமாக சென்றுள்ளது.

அப்போது கலா என்ற பெண் மற்றும் அவரது 13 வயது மகன் மனீஷ் ஆகியோர் சாலையை கடக்க முயன்றுள்ளனர்.

அதிவேகத்தில் வந்த கார் அவர்கள் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
அத்துடன் சம்பவ இடத்திலேயே தாயும், மகனும் பரிதாபமாக மரணித்தனர்.

இதற்கிடையில், நிற்காமல் சென்ற கார் மற்றொரு வாகனத்தின் மீது பலமாக மோதி விபத்திற்குள்ளானதில், இளைஞர்கள் இருவருமே பலியாகினர்.

அவர்கள் இருவரும் காரில் பயணிக்கும்போதே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00