94
‘வணங்குவோம் வல்லமை சேர்ப்போம்’ நினைவுப் பேருரையும், கருத்தாடல் அரங்கும் கிளிநொச்சி மாவட்ட ‘தேசத்தின் குரல் அரசறிவியல் பள்ளி’யின் ஏற்பாட்டில்,
நேற்றைய தினம் கிளிநொச்சியில் நடைபெற்றது.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளைத் தலைவர் அருணாசலம் சத்தியானந்தம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், நினைவுப் பேருரையை யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி கலாநிதி.ரகுராம் வழங்கினார்.
தொடர்ந்து கருத்துரைகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன், எழுத்தாளர் குணா.கவியழகன் ஆகியோர் நிகழ்நிலை மூலம் வழங்கிய அதேவேளை, ஊடகவியலாளர் அ.நிக்சன் நேரடியாகவும் நிகழ்த்தியிருந்தனர்.
நிகழ்வில், ‘விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்ட மக்களனதும், மாவீரர்களதும் தியாகத்துக்கு மதிப்பளித்து தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்கிற ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை உறுதிப்படுத்த எந்தவித விட்டுக்கொடுப்புகளுக்கும், சமரசங்களுக்கும் இடமற்று உறுதியோடு உழைப்போம்’ என்ற மகாநாட்டுத் தீர்மானமும் வெளிப்படுத்தப்பட்டது.
நிகழ்வில், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழ்த் தேசிய அரசியல் பிரமுகர்கள், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள், அதிபர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ்த் தேசிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.