138
இந்திய மாநிலம் பீகாரில் அரசு வேலை கிடைத்த இளைஞரை, கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் கடத்தி திருமணம் செய்து வைத்த சம்பவம் நடந்துள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கௌரம் குமார். இவர் அரசு வேலைக்காக தேர்வு எழுதி அதன் முடிவுக்காக காத்திருந்தார்.
சமீபத்தில் அவர் தேர்வில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆசிரியராக பணி நியமனம் பெற்றார்.
இந்த நிலையில் கௌரம் குமாருக்கு வேலை கிடைத்த 24 மணிநேரத்தில் அவர் கும்பல் ஒன்றினால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார்.
பின்னர் அவருக்கு ஒரு பெண்ணுடன் கட்டாய திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், வட இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
அங்கு படித்த நல்ல வேலையில் இருக்கும் இளைஞர்கள் கடத்தப்பட்டு, அவர்களுக்கு இவ்வாறு கட்டாய திருமணம் செய்து வைக்கப்படுகிறது.
இந்த திருமணத்தை ‘பகட்வா விவாஹா’ என்ற அழைக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் இதேபோன்று இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு, அவர் அழுதுகொண்டே தாலி கட்டிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.