யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், நேற்று உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், குணரத்தினம் சுபீனா (25 வயது) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீட இறுதியாண்டு மாணவியான குறித்த மாணவி, காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இந் நிலையில், மாணவி மேலதி சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், மாணவி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக, வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.