101
யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ண விளையாட்டுப்போட்டி நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.
நிகழ்வானது மாவட்டச் செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளரும், நலன்புரி சங்கத் தலைவருமான சுரேந்திரநாதன் தலைமையில் வேலணை துறையூர் ஐயனார் கழக விளையாட்டு மைதானத்தில் நேற்று பிற்பகல் 1 மணிக்கு இடம்பெற்றது.
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/11/FB_IMG_1701342126257-300x200.jpg)
நிகழ்வில், பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபரும், நலன்புரி சங்க போசகருமான திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் கலந்து கொண்டார்.
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/11/FB_IMG_1701342113774-300x200.jpg)
அத்துடன், சிறப்பு விருந்தினர்களாக மேலதிக அரசாங்க அதிபரும் உபபோசகருமான திரு.மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.கனகராஜா ஸ்ரீமோகனன் மற்றும் கௌரவ விருந்தினராக வேலணை பிரதேச செயலாளர் திரு.கயிலாசபிள்ளை சிவகரன் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/11/FB_IMG_1701342081607-300x200.jpg)
யாழ்ப்பாண மாவட்ட செயலகம் உட்பட பதினைந்து பிரதேச செயலகங்கள் இந்த வெற்றிக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றின.
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/11/FB_IMG_1701342148944-300x200.jpg)
போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலகம் முதலாம் இடத்திதையும், தெல்லிப்பழை பிரதேச செயலகம் இரண்டாம் இஇடத்தையும், கரவெட்டி பிரதேச செயலகம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/11/FB_IMG_1701342131758-300x200.jpg)
![](https://namthesamnews.com/wp-content/uploads/2023/11/FB_IMG_1701342116976-300x200.jpg)
நிகழ்வில், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தார்கள்.