தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் நாடு தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மைச் செயலாளர் எல்டஸ் மேத்யூவும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார். அதேவேளை தேசிய மக்கள் செயற்குழு உறுப்பினர் சக்தி விஜித ஹேரத்தும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.