Home » சவூதி அரேபியாவில் உறுவாக்கப்பட்டு வரும் மற்றுமொரு அதிசயம்

சவூதி அரேபியாவில் உறுவாக்கப்பட்டு வரும் மற்றுமொரு அதிசயம்

by Vaishnavi S
0 comment

சவூதி அரேபியாவில் உலகில் மிக உயரமான கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது.

உலகின் மிக உயர்ந்த கட்டடமாக கருதப்படும் டுபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவை (burj khalifa) விட உயரமான கட்டடமாக இது கருதப்படுகின்றது.

இந்த கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடையும்போது அது டுபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவை (burj khalifa) விட உயரமான கட்டடமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சவூதி அரேபியாவின் மையத்தில் ஜெட்டாஹ் டவர் அல்லது கிங்டம் டவர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உயர்ந்த கட்டடம் தற்போது கட்டுமானப் பணியில் உள்ளது.

இதன் உயரம் 1000 மீட்டர் (1 கி.மீ / சுமார் 3,281 அடி) இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ஈர்ப்பை மையமாக வைத்து கட்டப்பட்டுவரும் ஜெட்டாஹ் டவர், உணவகம், தங்கும் விடுதிகள், ஆடம்பர குடியிருப்புகள், அலுவலகங்கள் என பலவற்றை உள்ளடக்கியதாக கட்டப்பட்டு வருகிறது.

டுபாயில் கடந்த 2004ஆம் ஆண்டு புர்ஜ் கலிஃபா கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து 6 ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமானப் பணிகள் முடியும்போது உலகின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையைப் பெற்றது.

828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலிஃபாஇ உலகில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தமான கட்டடமாக மாறியது.

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00