Home » இலங்கை மின்சார சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

by Vaishnavi S
0 comment

இலங்கையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகள் அல்லது இணைப்புகள் தொடர்பில் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலங்கை மின்சார சபைக்கு உடனடியாக அறிவிக்குமாறும் இலங்கை மின்சார சபை மக்களை கோரியுள்ளது.

இந்நிலையில் இலங்கை மின்சார சபை அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆண்டில் சட்டவிரோத மின்வேலிகள் காரணமாக சுமார் 50 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், பல்வேறு மனித நடவடிக்கைகளால் 2023 ஆம் ஆண்டில் 474 காட்டு யானைகளும் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் சுமார் 6,000 காட்டு யானைகள் வசித்து வரும் நிலையில் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சட்டவிரோத செயல்களை தடுக்க அனுமதியின்றி மின்சாரம் வழங்கப்படுவது தொடர்பில் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலங்கை மின்சார சபைக்கு உடனடியாக அறிவிக்குமாறும் இலங்கை மின்சார சபை மக்களை கோரியுள்ளது.

 

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00