Home » நான்கே மாதத்தில் 10,000 கோடி லாபம் பார்த்த அம்பானி!

நான்கே மாதத்தில் 10,000 கோடி லாபம் பார்த்த அம்பானி!

by Vaishnavi S
0 comment

நான்கே மாதத்தில் பத்தாயிரம் கோடி லாபம் எடுத்தது என்ற பெருமையை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய குழுமமான ரிலையன்ஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டிற்கான 3-வது காலாண்டு முடிவுகளை பிரபல ரிலையன்ஸ் குழுமம் வெளியிட்டுள்ளது.

அதில், இடம்பெற்றுள்ள விவரங்கள் வருமாறு: நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 10,251 கோடியாகவும் இதன் ஆண்டுக்காண்டு வளர்ச்சி விகிதமானது 8.82% -ஆக உயர்ந்திருக்கிறது.

இந்த நிகர லாபமானது முந்தைய காலாண்டில் ரூ. 9, 420 கோடி ரூபாயாக இருந்தது.

அது தற்போது, நிறுவனத்தின் மொத்த வருவாய் 56.38% உயர்ந்து, ரூ. 1,60,299 கோடியாக உச்சம் பெற்றிருக்கிறது.

மேலும், கடந்தாண்டு மார்ச் மாதம் முடிவில் ரூ. 2,18,763 கோடியாக இருந்த கொடுக்கப்பட வேண்டிய கடன் தொகையானது, கடந்த டிசம்பரில் ரூ. 2,74,381 கோடியாக உயர்ந்திருக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இதுவே, நிறுவனங்களின் வரலாற்றில் அசுர வளர்ச்சி என்று கூறப்படுகிறது.

இந்த அசுர வளர்ச்சி குறித்து ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி கூறியதாவது:

இன்றைய தலைமுறை நுகர்வோர்களுக்கு ஏற்றார்போல் தங்களது பொருட்களின் விற்பனை நடந்து வருகிறது.

சில்லரை மற்றும் ஜியோ தளங்களில் செயல்பட்டு வரும் வர்த்தகங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.

இதேபோல், நாளுக்கு நாள் நிறுவனம் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று அம்பானி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

இதன்மூலம் ஒரே காலாண்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

 

You may also like

Leave a Comment

Our Company

Namthesam News is digital products company. Our products simplify and enhance the everyday lives of people.

Newsletter

Subscribe our newsletter for latest world news. Let's stay updated!

Laest News

© 2023 Namthesam News. All Right Reserved.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00